அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம்

புகைந்துகொண்டிருந்த அடுப்புக்குள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைக்க முயன்று தீக்காயங்களுக்குள்ளாகி சிக்கிச்சை பெற்றுவந்த இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இணுவில் மேற்கில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சீலன் அஸ்வினி (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார். கடந்த 8 ஆம் திகதி மதியம் சமைப்பதற்காக அடுப்பைப் பற்ற வைக்க முயன்றார். ஏற்கனவே தீ அணையாது இருந்த அடுப்பை பற்ற வைக்க அதற்குள் இவர் மண்ணெண்ணெயை ஊற்றியுள்ளார். இதனால் தீப்பற்றி யுவதியின் ஆடையில் பரவி எரிந்தது. … Continue reading அணையாத அடுப்பில் மண்ணெண்ணெய் ஊற்றிய யுவதி உடல் கருகி மரணம்